சுருங்கிய முகம்
வறண்ட கண்கள்
இறுகிய வயிறு
ஒட்டிக் கொண்டிருக்கும் உயிர்
பறந்து கொண்டிருக்கும் வீம்பு
வயதோகம் முடக்கிப்போட
வாட்டும் இதயம் படுக்கையில் போட
மங்கிய கண்கள்
வழிவிழி வைத்திருந்து காத்திருக்க
வருவானா வரமாட்டானா
வந்து உயிர் தண்ணீர் ஊட்டுவானா
என எண்ணி
வறண்ட கண்கள்
மகனை மகனே என்று மருக
மனக்குரல் கேட்டு வரமாட்டானா