அம்மா நீ
இருளே ஆனாலும் முழு நிலவாய் காட்சி தருகின்றாய்
வளர்பிறையாய் என்றும் என்னை வாழவைத்தாய்
நினைவுகள் கடலே ஆனாலும் அலை அலையாய் என் நினைவில் பொங்கி எழுகின்றாய்
மேகமே ஆனாலும் மழையாய் பொழிக்கின்றாய்
நான் தேட ஏதுமில்லை நீ இருந்த்வரை
நான் கேட்க ஏதுமில்லை அத்துணையும் தந்தாய்
விழிகளை மூடினாலும் விழித்திருக்கின்றேன்
விழித்திருக்கும் போதும் பழைய நிகழ்வுகளை
கனவாக காண வைக்கின்றாய்
நித்திரையிலும் உந்தன்
நினைவுகளில் விழித்து இருக்கின்றேன்
நீலக்கடலில் நின்முகங் காண்கின்றேன்
வானவில்லில் உன் வண்ணம் காண்கின்றேன்
என் மூச்சுக் காற்றில் உன் மூச்சை உணருகின்றேன்
மழைத் துளிகளில் நின்முகம்பார்க்கின்றேன்
இதயம் அடிக்கடி இடம்மாறித் துடிக்கிறதே
உன்தன் நினைவுகள் அடிக்கடி மறு ஒளி பரப்பு செய்கிறதே
நரைகூடிக் கிழப்பருவமெ எய்திவிட்டாலும்
நிந்தன் நினைவுகள் என்றும் பசுமையே
அம்மா
உந்தன் சிந்தனையில்
எந்தன் மூச்சை நிறுத்திவிடு;
அல்லால்
உந்தன் சிந்தனை மாய்த்துவிடு;